விடுதலை கோரி கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு
தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 பேரும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 பேரும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் கைதிகளான தமக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதேவேளை தடுத்து வைக்கப்பட்டள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள மனித உரிமை ஆனைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணியளவில் அமைதிப் போராட்டம் இடம் பெறவுள்ளது. மனித உரிமை ஆனைக்குழுவிற்கு முன்னால் கூடும் கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அமைதிப் பேரணியாக வவுனியா செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கவுள்ளனர்.
0 Response to "விடுதலை கோரி கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு"
แสดงความคิดเห็น