jkr

இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு


இலங்கையின் வடக்கே மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தும் பிரச்சனை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹிகித போகொல்லாகமவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை நடத்தியுள்ளார்.

மியான்மர் நாட்டில் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார கூட்டமைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பின் 12ஆவது அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்க ரோஹிகித போகொல்லாகம , எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் மியானமார் சென்றுள்ளனர். அப்போது இருவரும் சந்தித்துப் பேசினர்.

இதன் போது இலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்தும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரியவருகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates