தோணக்கிழப்புப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியது
அம்பாறை, கல்முனை, பெரியநீலாவணை, தோணக்கிழப்புப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. தோணக்கிழப்பு பகுதியில் கரையொதுங்கிய குறித்த சடலத்தை இன்றுகாலையில் மீட்டுள்ளதாக கல்முனைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கரையொதுங்கிய சடலம் 40வயது மதிக்கத்தக்கவருடையதென்றும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Response to "தோணக்கிழப்புப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியது"
แสดงความคิดเห็น