புத்திஜீவிகளுக்கு விலங்கிடமாட்டோமென்கிறார் ஜனாதிபதி
புத்திஜீவிகளுக்கு விலங்கிட்டுச் சிறைவைப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புத்திஜீவிகளுக்கு விலங்கிட்டு சிறைவைப்பதன்மூலம், அவர்கள் கருத்துக்கள் வெளியிடுவதை எந்த வகையிலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அலரி மாளிகையில் பல்கலைக்கழக உப வேந்தர்கள் உட்பட விரிவுரையாளர்களை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தி அனைவரதும் கருத்துச் சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என அங்கு தொடர்ந்து பேசுகையில் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் தமிழ்ச் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளுக்கு அழுத்தம் கொடுத்ததையும் இதன் காரணமாக எத்தனை பேராசிரியர்கள், கலாநிதிகள் பல்கலைக்கழக உப வேந்தர்கள் நாட்டை விட்டுச் சென்றனர் என்பதையும் அறிந்திருந்ததாக அவர்கூறினார்.
பயங்கரவாதிகள் இந்தப் புத்திஜீவிகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்த விதத்தை தெளிவாகப் பார்த்ததாகவும் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்
0 Response to "புத்திஜீவிகளுக்கு விலங்கிடமாட்டோமென்கிறார் ஜனாதிபதி"
แสดงความคิดเห็น